Thursday, April 16, 2026
HomeLatest NewsTikTok பாவனைக்கு தடை விதிக்க தயாரகும் அமெரிக்கா!

TikTok பாவனைக்கு தடை விதிக்க தயாரகும் அமெரிக்கா!

அமெரிக்க அரசாங்கத்திற்கு சொந்தமான எந்தவொரு தொழில்நுட்ப சாதனம் மூலமாகவும் TikTok சமூக ஊடக வலையமைப்பிற்கான அணுகலை தடை செய்ய அமெரிக்க அரசாங்கம் தயாராகி வருகிறதாக கூறப்படுகின்றது.

TikTok தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கருதி அந்த நாட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். செப்டம்பர் 2023 வரை அமெரிக்க கூட்டாட்சி அரசாங்கத்திற்கு நிதியளிக்கும் செலவு மசோதா சமீபத்தில் காங்கிரஸில் நிறைவேற்றப்பட்டது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் குறித்து அறிக்கை குறிப்பிடுகிறது. அதன்படி அரசாங்கத்தின் புதிய பொருளாதார தொகுப்பில் மத்திய அரசின் சாதனங்களில் டிக்டோக்கைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டம் உள்ளது.

டிக்டாக் சமூக வலைதளத்தை சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனம், டிக்டாக் பயனர்களின் நடத்தையை ரகசியமாக கண்காணிக்க தனது ஊழியர்களை பயன்படுத்தியது தெரியவந்ததையடுத்தே இந்த தடையை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில், பைட் டான்ஸ் நிறுவனம் டிக்டாக் சமூக வலைப்பின்னல் மூலம் அமெரிக்க குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent News