Saturday, May 4, 2024
HomeLatest Newsமுதலையை மணம் முடித்து முத்தமிட்ட நபர்..!வினோத சம்பவம்..!

முதலையை மணம் முடித்து முத்தமிட்ட நபர்..!வினோத சம்பவம்..!

நபர் ஒருவர் முதலையை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மெக்சிகோவின் சான்பெத்ரோ ஹுவாமெலுவா நகரத்தின் மேயரான ஹியூகோ சாசா என்பவரே இவாறு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அந்த நகரத்தில் பழங்குடியின மக்கள் அதிகமாக வாழ்ந்து வருவதுடன், அவர்கள் பழமையான பழக்க வழக்கங்களையும் பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையிலலே, மேயர் ஹியூகோ சாசா முதலை குட்டி ஒன்றை ஒன்றை திருமணம் செய்துள்ளார்.

அந்த வகையில், திருமணத்திற்காக முதலைக்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டதுடன், திருமணம் முடிந்த கையுடன் மேயர், அந்த முதலைக்கு முத்தமிட்டுள்ளார்.

இந்த திருமணமானது பழங்குடியின மக்களின் பழக்க வழக்கங்களின் ஒரு பகுதியாகவே இடம்பெற்றுள்ளது.

அதாவது இயற்கை வளத்தையும், மழை வளத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இந்த திருமணம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேயர் முதலைக்கு முத்தம் கொடுப்பது போன்ற காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகின்றது.

Recent News