Monday, May 6, 2024
HomeLatest Newsமாறி வரும் சர்வதேச சூழல்..!பிரிக்ஸ் அமைப்பில் சேர எத்தியோப்பியா கோரிக்கை..!

மாறி வரும் சர்வதேச சூழல்..!பிரிக்ஸ் அமைப்பில் சேர எத்தியோப்பியா கோரிக்கை..!

பிரிக்ஸ் அமைப்பில் சேர்வதற்காக ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியா கோரிக்கை விடுத்துள்ளது.

உலக பிரிக்ஸ் அமைப்பானது, பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா என 5 நாடுகளை உள்ளடக்கிய அமைப்பாகும்.

இவை வளர்ந்து வரும் அல்லது புதிதாக தொழில் மயமாகி வரும் நாடுகளாகும். இதில் தென் ஆப்பிரிக்கா இந்த ஆண்டுக்கான தலைமை பொறுப்பை வகித்து வருகின்றது.

எத்தியோப்பியா முன்னதாகவே ஆப்பிரிக்க ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை, அணிசேரா இயக்கம் போன்ற பல பன்னாட்டு அமைப்புகளில் உறுப்பினராக காணப்படுகின்றது.

ஆயினும்,மாற்றமடைந்து வரும் சர்வதேச சூழ்நிலை மற்றும் சர்வதேச படைகளின் மாற்றத்தை கணக்கில் கொண்டு தேசிய நலனை பாதுகாப்பதற்காக பிரிக்ஸ் அமைப்பில் சேர எத்தியோப்பியா முடிவு செய்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மெல்ஸ் அலெம் தெரிவித்துள்ளார்.

Recent News