Sunday, May 19, 2024
HomeLatest News“கோட்டா கோ ஹோம்” கூடாரங்களை அகற்றிய பொலிஸார்!

“கோட்டா கோ ஹோம்” கூடாரங்களை அகற்றிய பொலிஸார்!

கொழும்பு – காலி பேருந்து நிலையத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம’ கூடாரங்கள் இன்று காலை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கூடாரங்கள், பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக தெரிவித்து பொலிஸார் அவற்றை அகற்றியுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு – காலி முகத்திடலுக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில், நாட்டின் பல பகுதிகளில் ‘கோட்டா கோ கம’ கிராமக் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன.

காலி நகரில்​ ‘கோட்டா கோ கம’ எனும் பெயரில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இடத்தில் நேற்று முதல் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த இடத்திற்கு நேற்று பகல் சென்ற பொலிஸார், மாலை 04 மணிக்குள் அதனை அகற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recent News