Saturday, May 4, 2024
HomeLatest Newsசெயற்கை நுண்ணறிவில் புதிய நிறுவனம்..!மஸ்க் அதிரடி..!

செயற்கை நுண்ணறிவில் புதிய நிறுவனம்..!மஸ்க் அதிரடி..!

உலகின் முன்னணி கோடீஸ்வரரான எலோன் மஸ்க், xAI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான புதிய வணிக நிறுவனத்தைத் ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, தற்காலத்தில் விரிவடைந்து வரும் ChatGPTக்கு மாற்றாக உருவாக்குவதே அவரது நோக்கம் என
கூறப்பட்டுள்ளது.

ஆயினும், செயற்கை நுண்ணறிவை ஊக்குவிப்பதில் மஸ்க், முன்னர் எதிரான பதிலைக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, செயற்கை நுண்ணறிவை ஊக்குவிக்கக் கூடாது எனவும் அந்த துறையை முறையாக ஒழுங்குபடுத்தல் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமன்றி, செயற்கை நுண்ணறிவினால் மனித இனம் அழிவினை சந்திலாம் என்றும் மஸ்க், கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News