Friday, April 19, 2024
HomeLatest Newsஅரசுக்கு அதிக வருமானத்தை ஈட்டித்தரும் மதுபானம்..!

அரசுக்கு அதிக வருமானத்தை ஈட்டித்தரும் மதுபானம்..!

இவ்வருட வரவு செலவுத் திட்டத்துக்கான அரச செலவீனம் 7,800 பில்லியன் ரூபா எனவும், மாதாந்தம் அரசாங்க சம்பளக் கட்டணமாக 92 பில்லியன் ரூபா காணப்பட வேண்டும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை கலால் அதிகாரி மற்றும் ஒழுங்குபடுத்துபவர்கள் சங்கத்தின் 70ஆவது வருடாந்த மாநாட்டில் நேற்று கலந்துக்கொண்ட போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்வருட வரவு செலவுத் திட்டத்துக்கான அரச செலவீனம் 7,800 பில்லியன் ரூபா ஆகும். மாதாந்த அரசாங்க சம்பளக் கட்டணமாக 92 பில்லியன் ரூபா காணப்பட வேண்டும்.

இதேவேளை, ஓய்வூதியத்திற்காக 26 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்திற்கு அதிக வருமானம் ஈட்டித்தரும் பட்டியலில் கலால் திணைக்களம் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

இதேவேளை, மனித பாவனைக்கு தகுதியற்ற மதுபானங்களை இனங்கண்டு, அதற்கு எதிரான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கலால் திணைக்களத்தின் கீழ் தனியான ஆய்வுகூடத்தை நிறுவுவதற்கு இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

இதன் மூலம் தாமதமின்றி அதனுடன் தொடர்புடைய மதுபானங்களை இனங்கண்டு அவற்றை சமூகமயப்படுத்துவதை தடுக்க முடியும் என கூறியுள்ளார். 

பிற செய்திகள்

Recent News