Monday, April 29, 2024
HomeLatest Newsஇலங்கையின் மக்கள் தொகை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையின் மக்கள் தொகை தொடர்பில் வெளியான தகவல்

மக்கள்தொகை மற்றும் குடியிருப்புகள் கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு முதல் சில மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரவியல் துறை தெரிவித்துள்ளது.

இதன் முதல் கட்ட வரைபட வேலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் பி.எம்.பிரசாத் அனுரகுமார தெரிவித்துள்ளார்.

பட்டியலை எடுப்பதற்காக அதிகாரிகளுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி, இம்மாதம் மற்றும் அடுத்த மாதம் நடைபெறும் என அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் இதற்கு ஆதரவளிக்கும் எனவும் பிரசாத் அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

கணக்கெடுப்பு பணிக்குப் பிறகு, அடுத்த ஆண்டு முதல் சில மாதங்களில் மக்கள் தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு அனைத்து தனியார் நிறுவனங்கள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இதற்கு முன்னர், 2012 ஆம் ஆண்டு மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றாலும், தற்போது நிலவும் கொவிட் தொற்றுநோய் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடியவில்லை என மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Recent News