Wednesday, May 22, 2024
HomeLatest NewsWorld Newsநேபாளம் இந்தியா இடையே அதிகரிக்கும் பதற்றம் - எடுக்கப்பட்ட முக்கிய முடிவு..!

நேபாளம் இந்தியா இடையே அதிகரிக்கும் பதற்றம் – எடுக்கப்பட்ட முக்கிய முடிவு..!

‘அக்னிபாத் ‘ராணுவ ஆட்சேர்ப்பு திட்டம் தொடர்பாக இந்தியா-நேபாளம் இடையே ஏற்பட்டுள்ள பதட்டம் காரணமாக இந்திய ராணுவத்தின் ‘கோர்கா ரெஜிமென்ட் ‘ வீரர்கள் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது.


நேபாளம் இத்திட்டத்தின் கீழ் வீரர்களை நியமிப்பதை நிறுத்தியுள்ளதால், இதனால் ஏற்பட்டுள்ள இடைவெளியை நிரப்ப குர்கா வீரர்களுக்கு ஒத்த குணங்களைக் கொண்ட பழங்குடியினரை நியமிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.


மலைப்பிரதேசங்களில் அதன் துணிச்சலுக்காக அறியப்பட்ட குர்கா ரெஜிமென்ட் பாரம்பரியமாக நேபாளி நாட்டினரை நியமித்துள்ளது. அதனால் இந்திய ராணுவத்தில் எண்ணிக்கை குறைந்துள்ளது.


சில நேபாள குர்காக்கள் இப்போது ரஷ்ய இராணுவத்தில் வாய்ப்புகளைத் தேடுவதால் இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அத்தோடு சீனா தனது சொந்த ‘கோர்கா ரெஜிமென்ட்டுக்கு’ நேபாள வீரர்களை நியமிக்க முயற்சிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News