Friday, May 3, 2024
HomeLatest Newsகொரோனா தடுப்பூசியைக் கண்டு ஓட்டமெடுக்கும் முதியவர்கள்

கொரோனா தடுப்பூசியைக் கண்டு ஓட்டமெடுக்கும் முதியவர்கள்

சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் பல வைத்தியசாலைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்புகின்றன. கொரோனா உயிரிழப்புக்களும் அதிகரிப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இது உலக நாடுகளையெல்லாம் அதிர வைத்துள்ளது. பல நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன. ஆனால் சீனாவில் சர்வதேச பயணிகளை தனிமைப்படுத்த பிறப்பித்திருந்த உத்தரவையும் விலக்கிக்கொள்ளப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர். 

அடுத்த மாதம் 8-ந் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது. முதலில் அங்கு சர்வதேச பயணிகள் 2 வாரங்கள்இ அரசு முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயம் என்ற நிலை இருந்து வந்தது. பின்னர் இது 5 நாட்களாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் இனி தனிமைப்படுத்தப்படுவது ரத்தாகிறது. 

சீனா தனது எல்லைகளையும் திறந்து விடுகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அமில பரிசோதனையும் ரத்து சீனாவில் கொரோனா மேலாண்மையை ‘ஏ’ வகுப்பில் இருந்து ‘பி’ வகுப்புக்கு தரம் குறைக்கின்றனர். அந்த வகையில் கொரோனாவை டெங்கு காய்ச்சல் அளவுக்கு தரம் இறக்குகின்றனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. சர்வதேச பயணிகள் சீனா வந்ததும் நியூக்ளிக் அமில பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடும் ஜனவரி 8-ந் தேதி முதல் ரத்தாகிறது.

அவர்கள் தங்கள் சீன பயணத்துக்கு 2 நாட்கள் முன்னதாக ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். பாதிப்பு உறுதியானால் பயணத்தை ஒத்தி போடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

இது பற்றி சீன அதிகாரிகள் கூறும்போது, ‘உலக அளவில் பெருமளவில் இறப்புகளை ஏற்படுத்திய டெல்டா வைரஸ் போன்று ஒமைக்கரான் வைரஸ் ஆபத்தானது அல்ல’ என கூறுகின்றனர். 

சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு விவரத்தை வெளியிடுவதையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நிறுத்திவிட்டனர். ‘தடுப்பூசியாஇ வேண்டவே வேண்டாம்’ சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்புக்கும்இ முதியோர் பாதிப்புக்குள்ளாவதற்கும் கூறப்படுகிற காரணம் தடுப்பூசி செலுத்தாமைதான் என கூறப்படுகிறது.

ஆனால் அங்கே தற்போது அதிகாரிகள் முதியோர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக வீடுஇ வீடாக செல்கிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கிறார்கள்.

ஆனால் தடுப்பூசியா, வேண்டவே வேண்டாம் என்று முதியோர் ஓடுகிற நிலை உள்ளது. தடுப்பூசி போடுவதால் ஏற்படுகிற கடும் காய்ச்சல், ரத்தக்கட்டிகள் மற்றும் பிற பக்கவிளைவுகளால்தான் தடுப்பூசியைக் கண்டு முதியவர்கள் ஓடுகிறார்கள். 

தடுப்பூசி போட்டவருக்கு பாதிப்புகள் இதுபற்றி 64 வயதான லி லியான்ஷெங் என்பவர் கூறியதாவது:- கொரோனா தடுப்பூசியினால் ஏற்படுகிற பக்க விளைவுகள் குறித்து கேள்விப்படுகிற முதியோர்தான் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவதில்லை. என் நண்பர் ஒருவருக்கு 55 வயதாகிறது. அவர் தடுப்பூசி போட்டவுடன் காய்ச்சல் வந்தது. ரத்தக்கட்டிகள் ஏற்பட்டன. இதன் காரணமாக எனது நண்பர் இன்னொரு டோஸ் தடுப்பூசி போட விரும்பவில்லை. வைரஸ் உருமாறிக்கொண்டே இருக்கிறது. அப்படி இருக்கையில், நாம் போட்டுக்கொள்கிற தடுப்பூசிகள் எந்த அளவு பலன் அளிக்கும் என்பதை நாம் எப்படி தெரிந்துகொள்ள முடியும்? என்று அவர் கூறினார். 

Recent News