Sunday, April 28, 2024
HomeLatest Newsசாதிப் பாகுபாட்டிற்கு எதிராக மசோதாவை முன்மொழிந்த செனட் சபை உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல்....!

சாதிப் பாகுபாட்டிற்கு எதிராக மசோதாவை முன்மொழிந்த செனட் சபை உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல்….!

சாதிப்பாகுபாட்டை சட்டவிரோதமாகக் கருத வழிவகுக்கும் மசோதா கலிபோனியா மாகாண சட்டமன்றத்தின் கீழ் அவையில் இந்த வாரம் வர இருக்கின்றது.

கலிபோனியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சவீதா படேல் இந்த மசோதா சட்டமாக்கப்படுவதை ஆதரிப்பவர் மற்றும் எதிர்ப்பவர்களிடம் இது குறித்து உரையாடினர்.

இதேவேளை குடியரசு கட்சி செனட் உறுப்பினர் ஆயிஷா வஹாய் தான் வடிவமைத்த மசோதாவொன்றை கடந்த மார்ச் மாதம் அவையி்ல் சமர்ப்பித்தார்.

பாலினம் , இனம் , மதம் மற்றும் ாற்றுத்திறன் ஆகியவற்றிற்கு எதிரான பாகுபாடுகள் சட்டவிரோதமாக காணப்படுவதைப் போல் சாதிப் பாகுபாடையும் சட்டவிரோதம் என அறிவிக்க இம் மசோதா வழிவகுத்தது.

குறித்த மசோதா நிறைவேற்றப்படும் சந்தர்ப்பத்தில் சாதியப் பாகுபாட்டிறாகாக சட்ட விரோதமாகத் தடை விதித்த முதல் மாகாணம் என்ற பெருமையை கலிபோனியா பெற்றுக்கொள்ளும்.

இதேவேளை குித்த மசோதா மும்மொழிவிற்கு பின் சாதக பாதக கருத்துக்கள் நிலவி வரும் நிரைக்கு அப்பால் மசோதாவை முன்மொழிந்த சட்டமன்ற மேலவை உறுபாினர் ஆயிஷா வஹாய்க்கு கொலை மிரட்டல் விடு்கப்பட்டமை சுட்டி்காட்டத்தக்கது.

Recent News