Wednesday, May 1, 2024
HomeLatest NewsWorld Newsசீனா, வடகொரியாவுக்கு சேர்ந்து அடிக்க கூட்டு சேரும் முன்று நாடுகள்..!

சீனா, வடகொரியாவுக்கு சேர்ந்து அடிக்க கூட்டு சேரும் முன்று நாடுகள்..!

வட கொரியாவின் அச்சுறுத்தல்கள் அதிகரித்தால் , தென்கொரிய ,அமெரிக்கா மற்றும் ஜப்பானுடனான முத்தரப்பு ஒத்துழைப்பு வலுப்பெறும் என்று தென் கொரிய அதிபர் யூன் சுக் யியோல் தெரிவித்தார்.

இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்த மூன்று தலைவர்களும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .

ஆகஸ்ட் ஒப்பந்தம் மற்றும் குவாட் குழுவின் முயற்சிகளுக்கு இணையாக, அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மிகவும் வலுவான தென் கொரியா-அமெரிக்கா-ஜப்பான் கூட்டாட்சியை தற்போது யூன் முன்வைத்துள்ளமையானது .

சீனாவின் எழுச்சி மற்றும் வட கொரியாவின் அணுசக்தி அச்சுறுத்தல்களுக்கு எதிரான ஒற்றுமையை பலத்த சமிக்ஞையை வழங்க வழிவகுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Recent News