Wednesday, May 1, 2024
HomeLatest Newsபாகிஸ்தானில் தொடரும் பதற்றம் - ராணுவத்திற்கு அதிகாரங்கள் மறுப்பு

பாகிஸ்தானில் தொடரும் பதற்றம் – ராணுவத்திற்கு அதிகாரங்கள் மறுப்பு

பாகிஸ்தானில் தற்போது அன்வர் உல் ஹக் கக்கார் தலைமையிலான காபந்து அரசு பதவி வகித்து வருகிறது. இதேவேளை பாகிஸ்தான் அதிபராக ஆரிஃப் ஆல்வி கடந்த 2018ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் ராணுவத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் அரச ரகசியங்கள் சட்டத் திருத்தம் – 2023, பாகிஸ்தான் ராணுவ சட்டத் திருத்தம் – 2023 ஆகிய இரண்டு மசோதாக்கள் அதிபரின் ஒப்புதலுக்காக நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பாக ஆகஸ்ட் 9ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

முதல் மசோதா ராணுவ புலனாய்வு அதிகாரியின் அடையாளங்களை வெளிப்படுத்துவது குற்றம் எனவும், அப்படி வெளிப்படுத்தினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் வழி செய்கிறது. அதுமட்டுமின்றி ராணுவத்தை பற்றி அவதூறாக பேசினால் சிறை தண்டனை விதிப்பது தொடர்பாக இன்னொரு மசோதா இயற்றப்பட்டது.இந்த நிலையில் இரு மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்காமல் அந்த கோப்புகளை அதிபர் திருப்பி அனுப்பிவிட்டார்.அதிபரின் நடவடிக்கை தொடர்பாக பேட்டியளித்த பாகிஸ்தான் இடைக்கால சட்ட அமைச்சர் அகமது இர்பான், மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது சிறப்பு கவனம் செலுத்துவதற்காக நாடாளுமன்றத்திற்கே திருப்பி அனுப்புவதற்கு மட்டுமே அதிபருக்கு அதிகாரம் உள்ளது.ஆனால், வேண்டுமென்ற இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை அதிபர் தாமதப்படுத்தினார்.

அத்துடன் ஒப்புதல் அளிக்காமலும், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று கூட குறிப்பிடாமலும் மசோதாவை திருப்பி அனுப்பினார்.ஆளுநருக்கு எவ்வளவு திமிர்.. பதவி போனாலும் கவலையில்ல.. ஆவேசமான உதயநிதிஎனினும் மசோதா அனுப்பி 10 நாட்களாகியும் அதிபரிடம் இருந்து ஒப்புதல் கையெழுத்து பெறப்படாவிட்டால் அவை தானாகவே சட்டமாகிவிட்டன என்றுதான் அர்த்தம் என்றும் அதிரடியாக தெரிவித்தார். மேலும், செனட் சபையில் அரசிதழில், “இரு சட்டங்களுக்கும் அதிபரின் ஒப்புதல் பெறப்பட்டதாகவே கருதப்படுகிறது” என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Recent News