Friday, May 22, 2026
HomeLatest Newsஇலங்கைக்கு விமான சேவையை மீண்டும் தொடங்கும் இரண்டு நாடுகள்!

இலங்கைக்கு விமான சேவையை மீண்டும் தொடங்கும் இரண்டு நாடுகள்!

ரஷ்யா மற்றும் பிரான்ஸ் விமான சேவைகள் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் முக்கிய விமானச் சேவைகளில் ஒன்றான ‘அஸூர் எயார்’ நாளைய தினம் முதல் விமான சேவையைத் தொடங்கும் என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தேசிய விமான நிறுவனமான ‘எயார் பிரான்ஸ்’ நாளைய தினம் முதல் விமான சேவையைத் தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News