Friday, May 17, 2024
HomeLatest News22 நாடுகளில் கடும் உணவு தட்டுப்பாடு !ஐ.நா. எச்சரிக்கை..!

22 நாடுகளில் கடும் உணவு தட்டுப்பாடு !ஐ.நா. எச்சரிக்கை..!

பாகிஸ்தானில் வரவுள்ள மாதங்களில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் 22 நாடுகளிலும் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும்
ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாலும் அரசியல் கொந்தளிப்பும் நிலவி வருவதாலும் அந்நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு குறைவடைந்துள்ளது.

இதனால், இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டுகோதுமை மா மற்றும் உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இவ்வாறிருக்கையில், பாகிஸ்தானில் வரும் மாதங்களில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக ஐ.நா. சபை எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக ஐ.நா. சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் விளைவுகள் உணவு உற்பத்தி, உணவு கிடைப்பது, வாழ்வாதார சாத்தியக் கூறுகளை பாதித்துள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்பு தீவிரமடைந்துள்ளதால் கடுமையான உணவு பாதுகாப்பின்மை அடுத்த மாதங்களில் உயரக் கூடும்.

பொருளாதார நெருக்கடியால் உணவு மற்றும் பிற முக்கிய பொருட்களை குடும்பங்கள் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறை, பணத்தின் மதிப்பு குறைந்து வருவது நாட்டின் முக்கிய உணவு மற்றும் எரிசக்தி விநியோகங்களை இறக்குமதி செய்வதற்கான திறனை குறைக்கின்றன என கூறப்பட்டுள்ளது.

குறித்த இந்த புதிய அறிக்கை வரும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலத்தை உள்ளடக்கியுள்ளது.

இதற்கு முன்னதாகவே, பாகிஸ்தானில் உணவு பற்றாக்குறை ஏற்படும் என்று ஐ.நா. சபை தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி, ஆப்கானிஸ்தான், நைஜீரியா, சோமாலியா, தெற்கு சூடான், ஏமன், ஹைட்டி, சூடான் புர்கினா பாசோ, மாலி போன்ற 22 நாடுகளிலும் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபயமுள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News