Monday, April 29, 2024
HomeLatest Newsஎத்தனை வருடங்கள் சென்றாலும் இலங்கையால் மீண்டு வரமுடியாது – ஆட்சி மாற்றமே அவசியம்.!

எத்தனை வருடங்கள் சென்றாலும் இலங்கையால் மீண்டு வரமுடியாது – ஆட்சி மாற்றமே அவசியம்.!

அரசாங்கத்தை விமர்சிக்கும் அனைவரையும் ரணில் தலைமையிலான அரசாங்கம் பயங்கரவாதிகள் என்று பெயரிட முயற்சிப்பதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அத்துடன் சந்வதேச நாணய நிதியத்துடனும் இந்தியா மற்றும் அதெரிக்காவுடன்
இணைந்து இந்த ஆட்சிளை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கவே ஆளும் தரப்பு தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல நாடுகள் பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைந்த போது அந்த நாடுகள் சர்வதேச நாணயநிதியத்தை நாடியிருந்தாகவும் அவ்வாறு நாடிய அனைத்து
நாடுகளும் பொருளாதார பின்னடைவில் இருந்து இதுவரை மீளவில் என்றும் இதே நிலையே இலங்கைக்கு ஏற்படவுள்ளதாக குமார் குணரட்னம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recent News