Thursday, May 16, 2024
HomeLatest Newsபோதும் உந்தன் சேவை - 550 குழந்தைகளுடன் நிறுத்து- தடை விதித்த நீதிமன்றம்..!

போதும் உந்தன் சேவை – 550 குழந்தைகளுடன் நிறுத்து- தடை விதித்த நீதிமன்றம்..!

550 ற்கும் அதிகமான குழந்தைகளுக்கு தந்தையானதாகக் கூறப்படும் ஸ்பெர்ம் டோனரை, இனி விந்தணு தானம் செய்யக்கூடாது என நெதர்லாந்து நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தொழில்நுட்பம் நன்கு வளர்ச்சியடைந்துவிட்ட இன்றைய உலகில் ரத்த தானம் போன்றே விந்தணு தானமும் அவ்வளவு எளிதாகிவிட்டது.

ஆனால், நெதர்லாந்து நீதிமன்றம் விந்தணு தானம் செய்யும் ஸ்பெர்ம் டோனர் ஒருவரை தொடர்ந்தும் விந்தணு தானம் செய்யத் தடை விதித்திருப்பது பலரையும் திகைப்படைய செய்துள்ளது.

நெதர்லாந்திலுள்ள மருத்துவ வழிகாட்டுதலின் அடிப்படையில், ஒரு ஸ்பெர்ம் டோனர் 12 பெண்களுக்கு மேல் விந்தணு தானம் செய்யக் கூடாது அல்லது 25 ற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தந்தையாக இருக்கக் கூடாது. ஆனால் நீதிமன்றத்தின் இந்த விவகாரத்தில் ஜொனாதன் எனும் 41 வயது ஸ்பெர்ம் டோனர் கிட்டத்தட்ட 550 ற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தந்தையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக 2017-லேயே 100-ற்கும் குழந்தைகளுக்கு ஜொனாதன் தந்தையாக இருப்பது தெரியவர நெதர்லாந்திலுள்ள கருவுறுதல் கிளினிக்குகளுக்கு விந்தணு தானம் செய்ய அவருக்குத் தடை விதிக்கப்பட்ட போதிலும் அவர் ஆன்லைன் மூலம் தொடர்ந்து விந்தணுக்களை தானம் செய்துள்ளார்.

தற்போது இது குறித்து அறக்கட்டளை மற்றும் ஒரு குழந்தையின் தாயார் ஒருவர் ஜொனாதனுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து குறித்த வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை இனி விந்தணு தானம் செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதுடன், மீறினால் ரூ.90 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Recent News