Saturday, May 18, 2024
HomeLatest Newsடிக்கெட் வழங்காத பஸ் நடத்துநர்கள் மூவரின் பணி இடைநிறுத்தம்!

டிக்கெட் வழங்காத பஸ் நடத்துநர்கள் மூவரின் பணி இடைநிறுத்தம்!

பயணிகளிடம் பணம் பெற்று பயணச்சீட்டு வழங்காத இலங்கை போக்குவரத்து சபையின் நடத்துனர்கள் மூவரின் சேவை இடைநிறுத்தப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .

மொனராகலையிலிருந்து மகும்புர, காலி மற்றும் கடவத்தை செல்லும் இரண்டு அதிவேகப் பேருந்துகளின் மூன்று நடத்துனர்கள் மற்றும் தங்காலையிலிருந்து எம்பிலிப்பிட்டிய வரையிலான பேருந்து ஆகியவற்றிலேயே பணம் பெற்றுக்கொண்டு பயணச்சீட்டு வழங்காததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த பேருந்து நடத்துனர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recent News