Saturday, May 4, 2024
HomeLatest Newsபியர் போத்தலில் கை வளையல் தயாரிக்கும் பெண்கள்!

பியர் போத்தலில் கை வளையல் தயாரிக்கும் பெண்கள்!

இந்தியா – பீகார் மாநிலத்தில் மது விலக்கு சட்டம் அமுலில் உள்ளது. எனினும் சட்ட விரோதமாக சில இடங்களில் விற்பனை செய்யப்படும் மது போத்தல்களை கைப்பற்றும் பொலிஸார், கலால் துறையினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு கைப்பற்றப்பட்ட மது போத்தல்களில் இருந்து கண்ணாடி வளையல்கள் தயாரிக்கும் பணியை பெண்கள் மூலமாக செய்து அசத்தி வருகிறார்கள்.முன்பு சோதனையின்போது கைப்பற்றப்பட்ட மது போத்தல்களை உடைத்து குப்பையாக வீசப்பட்ட நிலையில், தற்போது புதிய முயற்சியாக அவற்றை கண்ணாடி வளையல்கள் தயாரிக்க கொடுக்கின்றனர்.
இதற்காக பீகார் கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு சங்கம் என்ற தன்னாட்சி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் 150 பெண்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு கண்ணாடி வளையல்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் பீகார் முதலமைச்சர் தனியாக ஒரு உற்பத்தி ஆலையை திறந்து வைத்துள்ளார்.இங்கு நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் வளையல்கள் தயாரிக்க முடியும்.
தற்போது 2 தொன் மது போத்தல்களில் இருந்து 70 ஆயிரம் வளையல்களை இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் தயாரித்துள்ளனர். இவற்றை உள்ளூர் வியாபாரிகள் மூலம் விமான நிலையம் மற்றும் கண்காட்சிகளில் விற்பனைக்கு வைத்துள்ளனர்.

Recent News