Sunday, May 12, 2024
HomeLatest NewsWorld Newsரஷிய எல்லைக்குள் நுழைய முயன்ற உக்ரைன் ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை..!

ரஷிய எல்லைக்குள் நுழைய முயன்ற உக்ரைன் ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை..!

ரஷிய நாட்டு எல்லைக்குள் நுழைய முயன்ற உக்ரைன் ராணுவ வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகின்ற நிலையில் ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பிராந்திய எல்லை பகுதிக்குள் நுழைய முயன்ற உக்ரைன் ராணுவ வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய கவர்னர் அலெக்சாண்டர் போகோமாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் குறிப்பிடும் போது ” உக்ரைனிய நாசவேலை மற்றும் உளவுக்குழுவின் 6 பேர் பிரையன்ஸ்க்குள் நுழையும் முயற்சி முறியடிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

Recent News