Saturday, May 4, 2024

உக்ரைனை நேட்டோவில் இணைக்க முடியாது..!அதிபர் பைடன் அதிரடி..!

உக்ரைன் – ரஷ்ய போர் நடந்து வரும் சூழலில் உக்ரைனை நேட்டோ கூட்டமைப்பில் சேர்க்க முடியாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர், லித்துவேனியாவில் இடம்பெறவுள்ள நேட்டோ மாநாட்டில் உக்ரைனை இணைப்பது தொடர்பாக நல்ல முடிவு எட்டப்படும் என அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த வாரம் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

அந்த வகையில், நேட்டோ கூட்டமைப்பின் கோட்பாடின் அடிப்படையில் தற்பொழுது உக்ரைனை இணைத்தால் அதனை பாதுகாப்பதற்காக அமெரிக்கா உட்பட அனைத்து நேட்டோ நாடுகளும் ரஷ்யாவுடன் சண்டையிட வேண்டி வருமென அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரைனை நேட்டோவில் இணைத்து கொள்ள முடியாது என்றாலும் தொடர்ந்தும் ஆயுத உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Videos