Friday, May 17, 2024
HomeLatest NewsWorld Newsமீண்டும் ஒரு சிக்கலில் சிக்கிய ட்ரம்ப்..!

மீண்டும் ஒரு சிக்கலில் சிக்கிய ட்ரம்ப்..!

தேர்தல் மோசடி வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட 19 பேருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனக்கு எதிராக பாலியல் புகார் அளித்த பெண்களுக்கு குற்றத்தை மறைப்பதற்காக பணம் வழங்குதல், வெள்ளை மாளிகையில் இருந்து ரகசிய ஆவணங்களை கடத்தி சென்றது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் ட்ரம்ப் மீது நிலுவையில் உள்ளன.

அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் முடிவுகளை மற்ற முயன்றதாக ட்ரம்ப் மற்றும் அவருக்கு உதவி செய்த 18 பேர் மீது தேர்தல் மோசடி வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை அங்குள்ள ஜார்ஜியா மாகாண கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்தநிலையில் குற்றப்பத்திரிகையில் உள்ள 19 பேரிடமும் ஒரே நேரத்தில் விசாரணை நடத்த கோர்ட்டு முடிவு செய்து டிரம்ப் உள்பட வழக்கில் தொடர்புடைய 19 பேருக்கும் கைது வாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த வழக்கில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டு உறுதியானால் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.2 கோடி வரை அபராதமும் விதிக்கப்படலாம் என கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Recent News