Friday, May 17, 2024
HomeLatest NewsWorld Newsஇந்திய எல்லைக்குள் அத்துமீறிய நுழைவு -சுட்டுக்கொல்லப்பட்ட பாகிஸ்தானியர்..!

இந்திய எல்லைக்குள் அத்துமீறிய நுழைவு -சுட்டுக்கொல்லப்பட்ட பாகிஸ்தானியர்..!

ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லையில் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவ முயற்சித்ததற்காக பாகிஸ்தான் நபர் ஒருவர் எல்லை பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


அதிகாலை 1.45 மணியளவில் அர்னியா செக்டாரில் உள்ள ஜபோவால் எல்லை புறக்காவல் நிலையம் அருகே ஊடுருவும் நபர் எச்சரிக்கைகளை புறக்கணித்து எல்லை வேலியைக் கடந்து தப்பி ஓட முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.


இந்த நிலையில் தற்போது அப்பகுதியை சுற்றிவளைத்து, தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. மேலும் ஒரு வாரத்தில் பதிவான இதுபோன்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

இதே போன்று கடந்த ஜூலை 25 அன்று, உயர் தர ஹெராயின் ஏற்றிச் சென்ற மற்றொரு பாகிஸ்தான் நபர் சம்பா மாவட்டத்தில் பிஎஸ்எஃப் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Recent News