Friday, May 22, 2026
HomeLatest Newsசட்டவிரோதமான முறையில் எரிபொருளை கொண்டு சென்ற மூவர் கைது!

சட்டவிரோதமான முறையில் எரிபொருளை கொண்டு சென்ற மூவர் கைது!

கந்தளாய் 87 பகுதியில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளை லொறியில் ஏற்றிச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (01) பிற்பகல் கந்தளே கொட்டாத் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 2,740 லீற்றர் டீசல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கெக்கிராவ மல்சிறிபுர மற்றும் கொகரெல்ல பிரதேசத்தை சேர்ந்த 48 மற்றும் 27 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (02) கந்தளாய் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent News