Wednesday, May 15, 2024
HomeLatest Newsதிடீரென நாட்டை விட்டு ஓடிய இளவரசி!கராணம் என்ன?

திடீரென நாட்டை விட்டு ஓடிய இளவரசி!கராணம் என்ன?

கடுமையான சட்டங்களைக் கொண்ட இஸ்லாமிய நாடான கத்தார், FIFA உலகக் கோப்பை கால்ப்பந்து போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் விளையாட்டுப் போட்டிகளின் பெரும்பகுதி நிறைவடைந்துள்ளது. இறுதி போட்டி விரைவில் நடக்க உள்ளது. இதற்கிடையில், கத்தார் அதன் குடிமக்களை கொடுமைப்படுத்திய பல சம்பவங்கள் காரணமாக தொடர்ந்து சர்ச்சையில் உள்ளது. அதன் பிறகு கத்தார் இளவரசி ஒருவர் குறித்த தகவலும் திடீரென வைரலாகி வருகிறது.

பயத்தில் நாட்டை விட்டு வெளியேறிய இளவரசி

காத்தார் இளவரசி தனது வீட்டை விட்டு வெளியேறிய அதே காரணத்திற்காக, நாட்டைச் சேர்ந்த பலர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த இளவரசியும் தன் நாட்டுச் சட்டத்தால்  ஏற்பட்ட அச்சம் காரணமாக, தன் குடும்பத்தினர் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து வீட்டை விட்டு ஓடிவிட்டதால்தான் இளவரசி பற்றிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

விசித்திர இளவரசியின் மனம் பதைபதைக்க வைக்கும் கதை

இளவரசி கத்தாரில் ஆளும் குடும்பமான அல் தானியின் உறுப்பினர். ஓரினச்சேர்க்கை தடை செய்யப்பட்டுள்ளது. இளவரசி ஓரின சேர்க்கையாளர். அப்படிப்பட்ட நிலையில், திருநங்கை என்பதால் தானும் கடுமையாக தண்டிக்கப்படுவோமோ என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டது. இதனால் அவள் வீட்டை விட்டு ஓடி விட்டார். இளவரசி நாட்டை விட்டு வெளியேறிய சம்பவம் தொடர்பான கசிந்த ஆவணங்களின் அடிப்படையில் லண்டனின் சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Recent News