Saturday, May 18, 2024
HomeLatest Newsஒதுக்கீட்டுத் சட்டமூலம் மீதான ஜனாதிபதியின் ஆரம்ப உரை செவ்வாய்க்கிழமை இடம்பெறும்!

ஒதுக்கீட்டுத் சட்டமூலம் மீதான ஜனாதிபதியின் ஆரம்ப உரை செவ்வாய்க்கிழமை இடம்பெறும்!

2021ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தை திருத்துவதற்கான ஒதுக்கீட்டுத் (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான ஆரம்ப உரையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் எதிர்வரும் 30ஆம் திகதி செவ்வாயக்கிழமை சபையில் முன்வைக்கவுள்ளார்.

இது தொடர்பான விவாதம் எதிர்வரும் 31 மற்றும் செப்டெம்பர் 1ஆம் மற்றும் 2ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

சபாநாயகர் தலைமையில் அடுத்த பாராளுமன்ற அமர்வு நாளை மறுதினம் காலை 09.30 மணிக்கு கூடவுள்ளது.

அதாவது,மின்கட்டண திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் கொண்டு வரும் பிரேரணை மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் அன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

2022ஆம் நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கு முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் விவாதிக்கப்பட்டுபாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

அதற்கமைய ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2021 டிசெம்பர் மாதம் 10ஆம் திகதி சான்றுரைக்கப்படுத்தப்பட்டு, 2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமாகப் பெயரிடப்பட்டது.

மேலும்,பாராளுமன்றத்தின் ஊடாக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் கடந்த ஜூலை மாதம் 28ஆம் திகதி பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டு 9ஆவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் கடந்த 03ஆம் திகதி சம்பிரதாய பூர்வமாக ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதற்கமைய ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட கொள்கை பிரகடனத்திற்கமைய புதிய வரவு செலவு திட்டம் முன்வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய புதிய அரசாங்கத்தினால் 2022ஆம் ஆண்டில் எஞ்சியுள்ள காலப்பகுதிக்காக முன்னர் நிறைவேற்றப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களுக்காக திருத்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும்.

2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கான திருத்தச் சட்டமூலத்தை கடந்த 09ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக நிதி அமைச்சர் சார்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன சபையில் சமர்ப்பித்தார்.

ஆந்த அந்த சட்டமூலத்திற்கு அமைய 2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 2ஆவது பிரிவின் (1)உப பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள, இரண்டாயிரத்து எழுநூற்றுத் தொன்னூற்று பில்லியன் நானூற்றி நாற்பத்தாறு மில்லியன் ஐந்நூற்று ஐம்பத்தொட்டாயிரம் ரூபாவாகவிருக்கும் அரசாங்கத்தின் செலவினத்தொகையானது,மூவாயிரத்து இருநூற்று எழுபத்தைந்து பில்லியன் எழுநூற்றி என்பத்தாறு மில்லியன் ஐநூற்று ஐம்பத்தெட்டு ஆயிரம் ரூபா என மாற்றப்படும்.

Recent News