Friday, May 22, 2026
HomeLatest Newsகளமுனைக்கு திடீரென பயணமான உக்ரைன் அதிபர்..!

களமுனைக்கு திடீரென பயணமான உக்ரைன் அதிபர்..!

உக்ரைனின் கடற்படை தினத்தில் கடற்படையினரை வாழ்த்துவதற்காக மே 23 ஆம் திகதி உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி போர் நடைபெறும் களமுனையின் முன்வரிசைக்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவர் , உக்ரைனிய கடற்படை தினத்தில் எங்கள் வீரர்களை வாழ்த்த நான் இங்கு வந்துள்ளதாகவும், உக்ரைனைப் பாதுகாக்கும் அனைவருக்கும் மகிமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உக்ரைனிய கடற்படையினரின் தொழில்முறை, பின்னடைவு மற்றும் சகிப்புத்தன்மைக்கு நான் நன்றி கூறுகிறேன். நீங்கள் தைரியமாக ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து எங்கள் நாட்டைப் பாதுகாக்கிறீர்கள், நிலம், கடல் மற்றும் காற்று ஆகியவற்றில் மிகவும் கடினமான பணிகளைச் செய்கிறீர்கள்.”எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அதிபர் களமுனையின் எந்த பகுதிக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடப்படவில்லை.

மே 21 ஆம் திகதி ஜெலென்ஸ்கி ஜி7 உச்சிமா நாட்டிற்காக ஜப்பான் சென்றிருந்தார். அங்கு உக்ரைனின் சர்வதேச பங்காளிகளை சந்தித்தார்.

குறிப்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் சந்திப்பை மேற்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News