Thursday, April 30, 2026
HomeLatest Newsவரி அதிகரிப்பால் 24,000 கிலோ ஆப்பிள் பழங்களை தூக்கி எறிந்த உரிமையாளர்!

வரி அதிகரிப்பால் 24,000 கிலோ ஆப்பிள் பழங்களை தூக்கி எறிந்த உரிமையாளர்!

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தற்போது, துறைமுகத்தில் தேங்கியுள்ள சுமார் 24,000 கிலோகிராம் ஆப்பிள் தொகையை தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சமீபத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி அதிகரிப்பு காரணமாக குறித்த ஆப்பிள் தொகையை பெற்றுக்கொள்வதற்கு அதன் உரிமையாளர் மறுத்துவிட்டார்.

இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட அப்பிளின் மொத்த பெறுமதி சுமார் 2 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News