Tuesday, May 7, 2024
HomeLatest Newsவிவசாயிகளை கைவிட்ட அரசாங்கம்: புதிய அறிவிப்பு வெளியானது!

விவசாயிகளை கைவிட்ட அரசாங்கம்: புதிய அறிவிப்பு வெளியானது!

எதிர்வரும் பெரும்போகத்தில் உர விநியோகத்தில் இருந்து அரசாங்கம் விலகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய, உர விநியோகம் தனியார் நிறுவனங்களிடம்  ஒப்படைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரசாயன உரம், சேதன உரம், விதைகள் மற்றும் விவசாய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான நிதி நிவாரணங்களை வழங்கவுள்ளதாகவும் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதற்காக, கியூ.ஆர். குறியீட்டு முறைமையை உருவாக்கி, அனைத்து விவசாயிகளுக்கும் அதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Recent News