Monday, April 29, 2024
HomeLatest Newsபூமிக்கு காத்திருக்கும் பேராபத்து! இன்றைய தினம் பூமியை நெருங்கும் 3 விண்கற்கள்

பூமிக்கு காத்திருக்கும் பேராபத்து! இன்றைய தினம் பூமியை நெருங்கும் 3 விண்கற்கள்

பூமிக்கு காத்திருக்கும் பேராபத்து! இன்றைய தினம் பூமியை நெருங்கும் 3 விண்கற்கள்பூமியை நோக்கி மிக வேகமாக மூன்று பெரிய விண்கற்கள் நெருங்கி வரும் என்று விண்வெளி நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மிக வேகமாக முன்னேறி வரும் இந்த விண்கற்கள் இன்றைய தினம் பூமிக்கு மிக நெருக்கமாக செல்லும் என்று எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

2022 YL1 , 2022 YA14, 2022 TE14 என்று இந்த மூன்று விண்கற்களுக்கும் பெயரிடப்பட்டுள்ளது.

இவற்றில் மிகப்பெரிய விண்கல்லான 2022 TE14 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 312 முதல் 689 அடி விட்டம் வரை இருக்கலாம் என்று அளவிடப்பட்டுள்ளது.

இதில் முதல் விண்கல் போயிங் 777 இன் இறக்கைகளின் அகலம் கொண்டது என்றும், இரண்டாவது விண்கல் கால்பந்து மைதானத்தின் நீளம் கொண்டது என்றும், மூன்றாவது விண்கல் தோராயமாக 50-அடுக்குமாடி கட்டிடத்தின் அளவு இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

2022 YL1 என்ற விண்கல் பூமியிலிருந்து 1.82 மில்லியன் மைல் தொலைவில் கடந்து செல்வதுடன் இது உலகளாவிய அளவில் பூமிக்கு மிக அருகில் இருப்பதாக கருதப்படுகிறது.

இருப்பினும் இவை உலகளாவிய அடிப்படையில் கவலைப்பட வேண்டிய அளவீடு இல்லை, பூமிக்கும் விண்கல்லிற்கும் இடையே மில்லியன் கணக்கான மைல்கள் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பூமியுடன் நெருங்கிச் செல்லும்

இது தொடர்பில் விண்வெளி நிபுணர் பால் சோடாஸ் கூறுகையில், 2022 YA14, 2022 TE14 ஆகிய இரண்டு விண்கற்களும் ஆபத்தானவையாக கருதப்படுவதுடன் 2022 TE14 விண்கல் பூமியை தாக்கும் வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிடுகிறார்.

அதேவேளை, பிரித்தானியாவின் ஸ்பேஸ்கார்டு மைய கண்காணிப்பு இயக்குனரான ஜே டேட், இந்த மூன்று விண்கற்களும் இன்று பூமியுடன் நெருங்கிச் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Recent News