Tuesday, April 23, 2024
HomeLatest Newsபொலிஸ் மா அதிபரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று விசாரணை

பொலிஸ் மா அதிபரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று விசாரணை

பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரட்னவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்றைய தினம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

கடந்த 9ம் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தாமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் பொலிஸ் மா அதிபரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

தேசபந்து தென்னக்கோனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுமார் 9 மணித்தியாலங்கள் விசாரணை நடாத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காலிமுகத்திடல் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்த வந்தவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை என்பனவற்றை பிரயோகிக்க வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டார் என சுமத்தப்படும் குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் முன்னாள் அமைச்சர் டொக்டர் ரமேஸ் பத்திரனவும் பொலிஸ் மா அதிபர் மீது குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News