Friday, April 26, 2024
HomeLatest Newsமுதல் மாவீரர் சங்கரின் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக ஆரம்பம்!

முதல் மாவீரர் சங்கரின் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக ஆரம்பம்!

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை(27) தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெறவுள்ள நிலையில் முதல் மாவீரர் சங்கரின் வீட்டில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறையில் உள்ள சங்கரின் இல்லத்தில் ஈகைச்சுடரேற்றி நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்,

இதன் போது மூத்த போராளி பண்டிதரின் தாயாரும் பங்குகொண்டு அஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

Recent News