Monday, April 29, 2024
HomeLatest Newsசர்க்கரைக்கு மாற்றீடான இனிப்பு பொருட்களால் புற்றுநோய் ஏற்படும்..!ஆய்வில் அதிர்ச்சித் தகவல்..!

சர்க்கரைக்கு மாற்றீடான இனிப்பு பொருட்களால் புற்றுநோய் ஏற்படும்..!ஆய்வில் அதிர்ச்சித் தகவல்..!

சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தும் இனிப்பு பொருட்களினால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

அதாவது, நீரிழிவு நோயாளிகள் சர்க்கரைக்கு மாற்றீடாக காபி, தேநீர் போன்ற பானங்களில் அஸ்பார்டேம் போன்ற செயற்கை இனிப்புக்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அஸ்பார்டேமின் பாதுகாப்பு மதிப்பாய்வினை, உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் ஆராய்ச்சிப் பிரிவான புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் நடத்தியுள்ள நிலையில் அதன் அறிக்கை அடுத்த மாதம் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்த வகையில், இந்த அறிக்கை தொடர்பாக வரும் தகவல்களின் அடிப்படையில், செயற்கை இனிப்பான அஸ்பார்டேம், மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கலாம் என்று இந்த அமைப்பு முத்திரையிட தாயராகி வருகின்றது.

புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனத்தின் இந்த பாதுகாப்பு மதிப்பாய்வு இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து ஆதாரங்களின் அடிப்படையில் அஸ்பார்டேம் ஆபத்தானதா? அல்லது இல்லையா? என்பதை மதிப்பீடு செய்வதற்காகவே நடத்தப்பட்டுள்ளது.

ஆயினும், ஒரு நபர் இவ்வாறான தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களை உட்கொள்வதில் பாதுகாப்பான அளவு எவ்வளவு என்பது தொடர்பில் கணக்கில் எடுக்கப்படுவதில்லை.

1980 ஆம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதிகளில் இருந்தே டேபிள் டாப் இனிப்பு எனப்படும் அஸ்பார்டேம், சர்க்கரை போன்ற பொருட்களுக்கு ஒரு செயற்கை மாற்றாகவும் பயன்படுத்தப்படுகின்றது.

அது மட்டுமன்றி, டயர் சோடாக்கள், சூயிங் கம், காலை உணவு, தானியங்கள் மற்றும் இருமல் மருந்து போன்ற தயாரிப்புகளிலும் சுவைக்காக பயன்படுத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News