Friday, March 29, 2024
HomeLatest Newsலண்டனில் விமானங்கள் பறக்கத் திடீர் தடை- வெளியான விசேட அறிவிப்பு!

லண்டனில் விமானங்கள் பறக்கத் திடீர் தடை- வெளியான விசேட அறிவிப்பு!

பிரித்தானியா ராணியின் உடலை தாங்கிய சவப்பெட்டி வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்திற்கு கொண்டு செல்லும் ஊர்வலத்தின் போது மத்திய லண்டனில் அமைதி நிலவுவதை உறுதி செய்வதற்காக விமானங்கள் பறப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சில விமானங்கள் தடைபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணியின் இறுதிச் சடங்கின் நாளான திங்கட்கிழமை அட்டவணையில் மேலும் மாற்றங்கள் இருக்கும் எனவும், இது குறித்து வரும் நாட்களில் கூடுதல் விவரங்கள் வழங்கப்படும் எனவும் விமான நிலையம் அறிவித்துள்ளது.

பெருநகர காவல்துறை கடும் எச்சரிக்கை

கடந்த வெள்ளிக்கிழமை சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (சிஏஏ) அறிவித்த வான்வெளி கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, 2,500 அடிக்கு (760 மீ) கீழே பறக்கும் ட்ரோன்கள் உட்பட தரமற்ற விமானங்கள் செப்டம்பர் 19 அன்று இறுதிச் சடங்கு நடைபெறும் வரை மத்திய லண்டனில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனுமதியின்றி ட்ரோனைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

சரியான நேரத்தில் மத்திய லண்டன் மற்றும் வின்ட்சர் பகுதிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடு வழங்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து ஆணையம் மேலும் கூறியுள்ளது.

Recent News