Wednesday, March 26, 2025
HomeLatest Newsபுலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்குரிய ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சைக்கான திகதியை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 18 ஆம் திகதியும் கல்வி பொது தராதர பத்திர உயர்த்தர பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி முதல் பெப்பிரவரி மாதம் 17 ஆம் திகதி வரையிலும் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News