Friday, May 3, 2024
HomeLatest Newsஇலங்கையில் மத ரீதியான துன்புறுத்தல் தொடர்கின்றது அமெரிக்காவின் வருடாந்த அறிக்கையில் தெரிவிப்பு...!

இலங்கையில் மத ரீதியான துன்புறுத்தல் தொடர்கின்றது அமெரிக்காவின் வருடாந்த அறிக்கையில் தெரிவிப்பு…!

2022 இல் இலங்கையில் மதச் சிறுபான்மையினர் துன்புறுத்தப்பட்டார்கள் என மதச் சுதந்திரம் குறித்த தனது வருடாந்த அறிக்கையில் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் ஜனாதிபதி ,பிரதமர்., அமைச்சர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளுடனான சந்திப்பின் போது அமெரிக்கா தூதரக அதிகாரிகள் மோதலுக்கு பிந்தைய நல்லிணக்க செயற்பாட்டின் ஒரு பகுதியாக இன மற்றும் மத சிறுபான்மையினரை மதித்து அவர்களை அரவணைப்பதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தனர் என அமெரிக்கா இராஜாங்க அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மதசிறுான்மை குழுக்களைச் சேர்ந்தவர்களை துன்புறுத்தல் அவர்களிற்கு எதிரான பாரபட்சம் குறித்த கரிசனைகளை தெரிவிப்பதற்காக தூதரக மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளைச் சந்தித்தனர் எனத் தெரிவித்தனர் என அமெரிக்கா மத சுதந்திரம் குறித்த வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தச் சந்திப்பின் போது நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறிப்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்த் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும்அமெரிக்கா அதிகாரிகள் வலியுறுத்தினர் என அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Recent News