Friday, May 17, 2024
HomeLatest NewsWorld Newsசெங்கடல் தாக்குதலுக்கு ஈரானின் உதவி தேவையில்லை - ஹூதிஸ் செய்தி தொடர்பாளர் தெரிவிப்பு..!

செங்கடல் தாக்குதலுக்கு ஈரானின் உதவி தேவையில்லை – ஹூதிஸ் செய்தி தொடர்பாளர் தெரிவிப்பு..!

மேற்கத்திய மற்றும் பிராந்திய பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி, தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல், ஈரானின் துணை இராணுவப் படைகள், ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் உட்பட ஆயுதங்களை வழங்குவதாகவும், செங்கடலில் வணிகக் கப்பல்களை குறிவைக்க உளவு தகவல்களை வழங்குகிறது என்றும் தெரிவிக்கிறது.

அறிக்கையின்படி, ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள செங்கடல் கண்காணிப்புக் கப்பல், பாப் அல்-மண்டேப் ஜலசந்தியில் உள்ள கப்பல்கள் மீதான தாக்குதல்களில் பயன்படுத்த ஹூதிகளுக்கு கண்காணிப்பு தகவல்களை அனுப்புகிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இருப்பினும், ஈரானின் உதவி தேவையில்லை என்று ஹூதிஸ் செய்தித் தொடர்பாளர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். “எங்களிடம் உளவுத்துறை வசதிகள் உள்ளன, அவை பல ஆண்டுகளாக எங்களுக்கு எதிரான ஆக்கிரமிப்புகளில் தங்களை நிரூபித்துள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Recent News