Thursday, May 9, 2024
HomeLatest Newsநாடு திரும்பும் கோட்டாவுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கத் தயாராகும் ரணில் அரசு

நாடு திரும்பும் கோட்டாவுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கத் தயாராகும் ரணில் அரசு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பாக நாடு திரும்பவும், அவருக்கு தேவையான பாதுகாப்பு உட்பட ஏனைய வசதிகளை வழங்குமாறும் ஜனாதிபதியிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

Recent News