Saturday, April 27, 2024
HomeLatest Newsமுக்கிய மாநாட்டிற்காக காத்திருக்கும் உக்ரைன் ஜனாதிபதி

முக்கிய மாநாட்டிற்காக காத்திருக்கும் உக்ரைன் ஜனாதிபதி

எமது நண்பர் யார், எதிரி யார் என்பது இன்று தெரிந்து விடும் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

பிரஸ்ஸல்ஸில் இன்று நடைபெறவுள்ள அவசரகால உச்சிமாநாட்டில் இது தெளிவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நடைபெறவுள்ள ஜி7, நேட்டோ, ஐரோப்பிய ஒன்றிய மாநாடுகள் முக்கியமானது. அதில் நமது நிலைப்பாட்டை வலுவாக பிரதிநிதித்துவப்படுத்துவோம்.

“இந்த மூன்று உச்சிமாநாடுகளில் யார் நண்பர், யார் கூட்டாளி, யார் பணத்திற்காக நம்மை ஏமாற்ற முடியும் என்பது தெளிவாகத் தெரியும்,” என்று ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

Recent News