Thursday, May 16, 2024
HomeLatest Newsஅரசியல் காய்நகர்த்தல்கள் தீவிரம்; ஜனாதிபதியை தேடும் முக்கியஸ்தர்கள்!

அரசியல் காய்நகர்த்தல்கள் தீவிரம்; ஜனாதிபதியை தேடும் முக்கியஸ்தர்கள்!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்றமக்கள் புரட்சி பாரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ள நிலையில் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான தீர்மானமிக்க கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று இடம்பெறவுள்ள அதேநேரம் கட்சிகள் பலவும் இரகசிய கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் சபாநாயகர் தலைமையில் இன்று முற்பகல் 10 மணிக்கு கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க குறிப்பிட்டார்.

ஜனாதிபதிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் இருக்கும் இடம் தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்படாதுள்ளன.

மேலும் மார்ச் இறுதி வரையில் மீரிஹானவில் உள்ள தனது தனிப்பட்ட இல்லத்தில் தங்கியிருந்த ஜனாதிபதி அங்கு முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை தொடர்ந்து அவர் கடந்த சில மாதங்களாக கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையிலேயே தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent News