Friday, April 17, 2026
HomeLatest Newsஇலங்கையில் திடீரென மாறிய மக்கள் – அதிர்ச்சியில் ரணில் அரசு

இலங்கையில் திடீரென மாறிய மக்கள் – அதிர்ச்சியில் ரணில் அரசு

பொருளாதார அழுத்தம் காரணமாக நாட்டில் மது பாவனை வேகமாக குறைந்துள்ளதாக கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அண்மைக்காலமாக மது பாவனை மிகவும் குறைந்துள்ளது. மதுபானத்தின் விலை அதிகரிப்பு மற்றும் வருமானம் குறைவடைந்தமையே இதில் பிரதானமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.

மேலும் உலகில் மது அருந்துவது தொடர்பான தரவரிசையில் இலங்கை 79வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளளமை குறிப்பிடத்தக்கது.

Recent News