Friday, April 26, 2024
HomeLatest Newsதமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் பலி!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் பலி!

தமிழகத்தில் பாலமேடு பகுதியில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் உயிரிழந்தார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.

இதனிடையே, பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த ராஜன் என்பவர் உயிரிழந்தார்.

பாலமேடு பகுதியை சேர்ந்த அரவிந்த் ராஜன் காளை முட்டியதில் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Recent News