Tuesday, April 30, 2024
HomeLatest NewsWorld Newsசீன ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை - ஏற்பாடுகள் தீவிரம்..!

சீன ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை – ஏற்பாடுகள் தீவிரம்..!

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 15-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே இருதரப்பு சந்திப்புக்கான சாத்தியம் இன்னும் உருவாக்கப்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.


ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பிரேசில், சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.


இந்த நிலையில் இந்த கூட்டத்தின் தொடர்ச்சியாக இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாட வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது இரு நாடுகளிற்கு இடையிலான எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recent News