Monday, April 29, 2024
HomeLatest Newsநாடளாவிய ரீதியில் எரிவாயு விநியோகம்! லிட்ரோ மகிழ்ச்சித் தகவல்

நாடளாவிய ரீதியில் எரிவாயு விநியோகம்! லிட்ரோ மகிழ்ச்சித் தகவல்

நாட்டில் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் 1 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், கொழும்புக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு 25 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், கொழும்பு தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு 75 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் நாட்டுக்கு தொடர்ச்சியாக எரிவாயுவைக் கொண்டு வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் எரிவாயு பற்றாக்குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும் எனவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News