Tuesday, May 7, 2024
HomeLatest Newsநொடி பொழுதில் உயிர் தப்பிய மெஸ்ஸி அணி வீரர்கள்!

நொடி பொழுதில் உயிர் தப்பிய மெஸ்ஸி அணி வீரர்கள்!

2022 ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய ஆர்ஜென்டினா அணிக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.இந்த நிலையில் மிகுதியான கூட்டத்தால் வீரர்கள் சென்ற பேருந்து விபத்துகளில் இருந்து தப்பிய சம்பவம் நடந்துள்ளது.

மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டினா அணி, பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.36 வருடங்களுக்குப் பிறகு வெற்றிக் கிண்ணத்துடன் நாடு திரும்பிய ஆர்ஜென்டினா அணிக்கு தலைநகர் பியூனஸ் அயர்சில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

வீதி ஓரங்களில் பல்லாயிரக்கணக்கில் கூடி இருந்த ரசிகர்கள், தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலைகளின் இரு புறங்களிலும் மக்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அப்போது திறந்தவெளி பேருந்தின் மேற்கூறையில் அமர்ந்திருந்த ஆர்ஜென்டினா அணி வீரர்கள் உலகக் கோப்பையை பொதுமக்களிடம் காட்டி மகிழ்ந்தனர்.

இதன் போது கூட்ட நெரிசல் காரணமாக வீதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது சாலைகளில் தொங்கிக் கொண்டிருந்த கேபிள்கள் வீரர்களின் தலையை உரசியது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதிலிருந்து அதிர்ஷ்டவசமாக வீரர்கள் தப்பினர்.

நேற்று நடந்த ஊர்வலத்தில் பேருந்து பாலத்தை கடக்கும்போது உணர்ச்சி மிகுதியில் பாலத்தின் மேலே நின்று கொண்டிருந்த ரசிகர்கள் வீரர்களின் பேருந்து மீது விழுந்தனர்.

மேலும் இதில் ஆர்ஜென்டினா வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் சிறிய காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஊர்வலம் சற்று நேரம் நிறுத்தப்பட்டு பின்னர் தொடர்ந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வாறு இரு விபத்துகளிலிருந்து ஆர்ஜென்டினா வீரர்கள் தப்பியுள்ளனர்.

Recent News