Tuesday, April 30, 2024
HomeLatest Newsஅனைவருக்கும் ஆன்மீக திருப்தி கிடைக்க வேண்டும்! ஜனாதிபதி வாழ்த்து

அனைவருக்கும் ஆன்மீக திருப்தி கிடைக்க வேண்டும்! ஜனாதிபதி வாழ்த்து

ஒரு மாத கால நோன்பினை நிறைவு செய்துக் கொண்டு இஸ்லாமிய மக்கள் அவர்களின் நம்பிக்கையின் ஈதுல் பித்ர் எனும் நோன்பு பெருநாள் தினத்தில் இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றார்கள்.

நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து ஆன்மீக திருப்தியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் தாமும் பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ள நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் இஸ்லாமிய மக்களால் மேற்கொள்ளப்படும் பல்வேறு சமய வழிபாடுகளில் நோன்பானது மகத்துவம் வாய்ந்த ஒரு விடயமாகும்.

ஒவ்வொரு நாளும் அல்ஹாவின் மார்க்க போதனைகளுக்கு அமைய நற்செயல்களை புரிய இது ஒரு மனத்தூண்டுதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Recent News