Sunday, February 23, 2025
HomeLatest Newsமஹிந்த இனி வேண்டாம்! 'மொட்டு' அதிரடி அறிவிப்பு!

மஹிந்த இனி வேண்டாம்! ‘மொட்டு’ அதிரடி அறிவிப்பு!

“மஹிந்த ராஜபக்ச இனி அரசியலில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தினார் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துக் கூறுகையில்,

“மஹிந்த இந்த நாட்டுக்குச் செய்ய வேண்டிய சேவை அனைத்தையும் செய்துவிட்டார். மஹிந்தவின் தலைமைத்துவம் இல்லை என்றால் இப்போதும் யுத்தம் நடந்துகொண்டிருக்கும்.

அவர் 80 வயதை நெருங்குகின்றார். அவர் ஓய்வெடுப்பது நல்லது. யாரும் அவரை அவர்களின் அரசியல் தேவைக்காகப் பயன்படுத்தினால் அதற்கு நான் இணங்கமாட்டேன்.

நெல்சன் மண்டேலாவின் மரணத்தின்போது உலகத் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அப்படியொரு கௌரவம் மஹிந்தவுக்குக் கிடைக்க வேண்டும்” – என்றார்.

Recent News