Friday, March 29, 2024
HomeLatest Newsயாழ். விமான சேவையை புதிதாக தானே ஆரம்பிப்பது போல அமைச்சர் சித்தரிக்ககூடாது! விந்தன் கனகரட்ணம்

யாழ். விமான சேவையை புதிதாக தானே ஆரம்பிப்பது போல அமைச்சர் சித்தரிக்ககூடாது! விந்தன் கனகரட்ணம்

இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே படகு போக்குவரத்து சேவையையும், தூத்துக்குடி மற்றும் காங்கேசன்துறை இடையே வர்த்தக சரக்கு கப்பல் சேவையையும் மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.

யாழ். ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

மைத்திரி – ரணில் நல்லாட்சி அரசாங்க காலத்தில் யாழ்ப்பாணத்துக்கான சர்வதேச விமான நிலையம் புனரமைக்கப்பட்டு, திறக்கப்பட்டு விமான போக்குவரத்து சேவைகள் சுமுகமாக நடைபெற்று வந்த சூழ்நிலையில் கொரோனாவை காரணம் காட்டியும் அரசியல் காரணங்களாலும் அது இடைநிறுத்தப்பட்டது.

தற்போது மீண்டும் இதனுடாக போக்குவரத்தை தொடங்குவது என்பது வரவேற்கக்கூடிய விடயம். அத்துடன்
1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் ராமேஸ்வரம் தலைமன்னாரிடையே படகுப் போக்குவரத்து சேவை இடம்பெற்றதுடன், தூத்துக்குடி மற்றும் காங்கேசன்துறை இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து சேவையும் இடம்பெற்றது.

இலங்கை இந்தியாவிலிருந்தே இருந்து, புடைவைகள், முச்சக்கர வண்டிகள், உதிரிப்பாகங்கள், உணவுப்பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றை கொள்வனவு செய்து சந்தைபடுத்துகின்றது.

இவற்றை கொழும்பின் ஊடாக வடக்கு, கிழக்கு போன்ற ஏனைய மாவட்டங்களுக்கு தருவிப்பது என்பது போக்குரவத்து சிரமம் அதிகமாகவும் மக்கள் மீது அதிக சுமைகளை சுமந்து விட்டிருக்கின்ற நிலையில் யாழில் விமான போக்குவரத்து சேவைகள் தற்போது ஆரம்பிக்கப்பட உள்ளது.

ஆகவே இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையேயும் படகு போக்குவரத்து சேவையையும் தூத்துக்குடி மற்றும் காங்கேசன்துறை இடையேயும் வர்த்தக சரக்கு கப்பல் சேவையை மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனை ஆரம்பித்தால் தான் தற்போது நாட்டின் பொருளாதாரம் உயர்வடைவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது. வெறுமனே வந்த விமான போக்குவரத்து அமைச்சர் புதிதாக தானே இந்த விமான சேவையை ஆரம்பிப்பது போல சித்தரிக்ககூடாது என்றார்.

வடக்கு கிழக்கு மக்கள் 2019ஆம் ஆண்டு தேர்தலில் தற்போதைய அரசாங்கத்தை நிராகரித்து விட்டார்கள். ஆனால் தற்போது தென்னிலங்கை மக்கள் ராஜபக்ஷ குடும்ப அரசாங்கத்தை நிராகரித்த போதும் கரத்த களரி நிலை ஏற்பட்டபோதும் அரசாங்கம் தனது பதவியை விட்டு விலகாமல் உள்ளது. ஆகவே அரசாங்கம் மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் என்றார்.

Recent News