Thursday, May 16, 2024
HomeLatest NewsWorld Newsஅடுத்தடுத்து அதிரடி காட்டும் இஸ்ரோ - வாயை பிளக்கும் உலக நாடுகள்..!

அடுத்தடுத்து அதிரடி காட்டும் இஸ்ரோ – வாயை பிளக்கும் உலக நாடுகள்..!

சந்திராயன் – 3 மற்றும் ஆதித்யா எல் – 1 வெற்றியை தொடர்ந்து ககன்யான் திட்டம் தொடர்பான அறிவிப்புகளை தற்போது ரஷ்ய வெளியிட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்தில் தரை இறங்குகின்ற சந்திராயன் – 3 திட்டத்தை வெற்றிகரமாக முடித்த இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் – 1 விண்கலத்தையும் வெற்றிகரமாக விண்ணில் ஏவி உள்ளது.

இந்த நிலையில் அடுத்தடுத்த இந்த வெற்றிகளை தொடர்ந்து இஸ்ரோ தற்போது ககன்யான் முதல் பரிசோதனை திட்டத்தை அடுத்த மாதம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் , விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தற்போது தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. அதன்படி முதல் பரிசோதனை திட்டத்தை இஸ்ரோ மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

ககன்யான் திட்டத்தில் முதல் இரண்டு ராக்கெட்டுகளில் ஆளில்லா விண்கலம் அனுப்பி பரிசோதிக்கப்படும். அடுத்ததாக பூமியிலிருந்து 300 முதல் 400 கி.மீ தூரத்தில் உள்ள புவியின் கீழ் அடுக்கு சுற்றுவட்ட பாதையில் விண்வெளி வீரர்கள் சில நாட்கள் சுற்றிவிட்டு திரும்பும் வகையில் விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

பாராசூட் உட்பட ககன்யான் திட்டத்துக்கான பல பரிசோதனைகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா-எல்1 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவிய பின் பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், ககன்யான் முதல் பரிசோதனை திட்டம் அடுத்த மாதம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 2025-ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முதல் திட்டம் மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News