Sunday, May 19, 2024
HomeLatest NewsWorld Newsகாஸாவில் பலியாகும் இஸ்ரேல் பிணைக் கைதிகள்-ஹமாஸுக்கு பெரிய சலுகை!  

காஸாவில் பலியாகும் இஸ்ரேல் பிணைக் கைதிகள்-ஹமாஸுக்கு பெரிய சலுகை!  

காஸாவில் ஹமாஸுடனான சண்டையின் போது மூன்று இஸ்ரேலிய பிணைக்கைதிகளைத் தவறுதலாகக் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து டெல் அவிவில் பிணைக் கைதிகளின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இஸ்ரேலின் தரை மற்றும் வான்வழித் தாக்குதல்களால் இஸ்ரேல் கைதிகளும் இறந்துவருவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனாலும் இஸ்ரேல் தாக்குதல்களை இன்றுவரை நிறுத்திக்கொள்ளவில்லை. சுட்டுக்கொல்லப்பட்ட 3 இஸ்ரேல் பிணைக் கைதிகள், சட்டை அணியாமல் வெள்ளை நிறக் கொடியைக்
கையில் ஏந்திவந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்த சம்பவம் என் நெஞ்சயும், ஒட்டு மொத்த நாட்டின் நெஞ்சயும் உடைத்துவிட்டது எனவும் போரில் எங்கள் வீரியம் குறையாது எனவும் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்கள் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்குமாறு இஸ்ரேலை வலியுறுத்துகின்றனர்.

டெல் அவிவில் நடந்து வரும் போராட்டத்தில் பேசிய 19 வயது பிணைக்கைதியின் தந்தை, ‘மக்களை உயிருடன் கொண்டு வருவதுதான் முக்கியமெனில், ஹமாஸுக்கு பெரிய சலுகை வழங்கி மீட்டு விடலாமே! எங்கள் உறவினர்களை உயிருடன் மீட்டுக் கொடுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

Recent News