Saturday, May 4, 2024
HomeLatest NewsWorld Newsஈராக்கில் தாக்குதல் நடத்தப்படவில்லை - இஸ்ரேல் அதிரடி தகவல்..!

ஈராக்கில் தாக்குதல் நடத்தப்படவில்லை – இஸ்ரேல் அதிரடி தகவல்..!

ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ஈராக் இராணுவத் தளத்தில் நடந்த வெடிப்பைச் பற்றிய விவரங்கள் இன்னமும் தெளிவாக வெளியிடப்படவில்லை என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.இராக்கின் ராணுவ தளத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பத்தில் ஈராக்கின் மக்கள்
அணிதிரட்டல் படைகளின் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாக ஈராக் கூறியது .
ஆனால் ஈராக்கில் அதுபோன்ற சம்பவம் நடந்த அறிகுறிகள் இல்லை என இஸ்ரேல் திட்டவட்டமாக கூறியுள்ளது.

டெல் அவிவிலிருந்து பேசிய ஸ்கை சர்வதேச நிருபர் அலெக்ஸ் ரோஸ்ஸி, நடக்காத
தாக்குதல்களுக்கு தாம் இல்லை என்று அமெரிக்கா கூறுவது சுவாரஸ்யமானது” என்று குறிப்பிட்டார்.”ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இந்த கட்டத்தில் நாம் கண்ட நேரடி மோதல் முடிந்துவிட்டாலும், இப்பகுதியில் இன்னும் குறிப்பிடத்தக்க பதட்டங்கள் உள்ளன என்பதே இது உண்மை என்று ரோஸ்ஸி மேலும் கூறினார்.

“அந்த நேரடி மோதலைப் பொறுத்தவரை, இரு தரப்பிலிருந்தும் வரும் அறிகுறிகள் என்னவென்றால், இது இனி அதிகரிப்பதை அவர்கள் விரும்பவில்லை, என்பதாகும்.ஆனால் ஈராக்கில் நடந்த சம்பவம் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நிழல் போர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Recent News